tamilnadu

img

தென்னிந்தியாவில் முதன் முதலாக  தூத்துக்குடி ஆட்சியரகத்திற்கு சுகாதார மதிப்பீடு சான்றிதழ்  

தூத்துக்குடி, ஆக.17- தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோரு க்கு கொரோனா தொற்று ஏற்படாத வகை யில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அலுவல கத்திற்கு வரும் வழியில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனை வரும் பயன்படுத்தும் வகையில் கை கழு வும் வசதி, தானியங்கி கிருமி நாசினி  இயந்திரம் உள்ளிட்டவை ஏற்படுத்தப் பட்டு உள்ளது.  இந்நிலையில் இந்திய தரக்கட்டுப் பாட்டு நிறுவனம் கோவிட் 19 காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இவ்வழிமுறைகள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ளதை இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தமிழக அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டாளர் கார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தார். இவர் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்ப டையில் தென்னிந்தியாவில் முதன் முத லில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்து க்கு இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில் துறை மூலம் செயல்படுத்தப் பட்டுள்ள (wash) பணிபுரியும் இடத்தில் உள்ள பாதுகாப்பு மற்றும் சுகாதார மதிப்பீடு சான்றிதழ் இந்திய தரக்கட்டுப் பாட்டு நிறுவனத்தின் மூலம் வழங்கப் பட்டுள்ளது. இந்த சுகாதார மதிப்பீடு சான்றிதழை ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம், கார்த்தி கேயன் நேரில் வழங்கினார். தென்னிந்தி யாவிலே தூத்துக்குடி ஆட்சியர் அலுவ லகம் இச்சான்றிதழை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.