tamilnadu

தூத்துக்குடியில் பிரண்ட்ஸ் ஆப்  போலீசுக்கு தடை

 தூத்துக்குடி, ஜூலை 5- தூத்துக்குடி மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி ஜெயகுமார் தெரிவித்தார். எஸ்பி ஜெயக்குமார் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்று (ஞாயிறு) ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள் ளது. மெடிக்கல், கொரோனா தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிக்கு செல்வோருக்கு அனுமதி அளிக்கப்பட் டுள்ளது. மேலும் தேவையில்லாமல் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்க ளில் வருபவர்களுக்கு உரிய அறிவுரை கள் வழங்கப்பட்டு வருகிறது. சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத் துக்குடி நகரில் 28 இடங்களில் இதுபோல் வாகன தணிக்கை நடத்தப்பட்டு வரு கிறது. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப் பினர் மீது பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் அந்த அமைப்பிற்கு தூத்துக்குடி மாவட்டத்தில்தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.