தூத்துக்குடி:
கோவில்பட்டி முன்னாள் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தோழர் அய்யலுசாமி (92) காலமானார். அவரதுமறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாலகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் தோழர் அய்யலுசாமியின் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் பொதுவாழ்வில் எளிமை நேர்மை தூய்மை இவற்றினை எள்ளளவும் குறையாத அளவில் கடைபிடித்து வாழ்ந்தவர். அவரது மறைவுஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பு என்று தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துள்ளார். அவரது இறுதி நிகழ்ச்சி சனியன்று மாலை 5 மணிஅளவில் அவரதுசொந்த ஊரான பெருமாள்பட்டிகிராமத்தில் நடைபெறுகிறது.