தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி ஒப்பந்த சுயஉதவிக்குழு தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.624, ஒட்டுநர்களுக்கு ரூ.622 தினக்கூலி வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊழியம், கொரோனா இன்சூரன்ஸ், கொரோனா பாதித்த தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி, பணி நேரத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம்(சிஐடியு) சார்பில் தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தூத்துக்குடி மாநகர கிளை தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட பொதுச்செயலாளர் முனியசாமி, உப்பு தொழிலாளர் சங்கத் தலைவர் பொன்ராஜ், சி.டபிள்யூ.எப்.ஐ., மாரியப்பன், மாவட்ட பொருளாளர் செல்வராஜ், பூபாலன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.