தூத்துக்குடி, ஜூன் 4- சித்தரிக்கப்பட்ட தனது புகைப்படங்களை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்த சசிகலா புஷ்பாவின் ரூ.4லட்சம் அபராதம் விதித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேஸ்புக், கூகிள் யூடியூப் ஆகிய இணையதளங்களில் தன்னை அவதூறாகவும் தவறாக சித்தரித்து போலியாக உருவாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்களை நீக்குமாறு அந்த இணைய தளங்களுக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா கடந்த 2011ம் ஆண்டு தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ராஜீவ் சஹாய் எண்ட்லா வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
மக்கள் பிரதிநிதி ஒருவர் தனது கணவர் அல்லாத எதிர்க்கட்சியை சேர்ந்த ஆண் ஒருவரை மூடிய கதவுக்குப் பின்னால் சென்று சந்தித்தது குறித்து அறிந்து கொள்ளும் உரிமை அவரைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு உண்டு. இதை பொது வெளியில் இருந்து மறைக்க விரும்புவதை பொதுநலன் சேர்ந்ததாக கருத முடியாது. அதுபோன்ற சந்திப்பிலும் அதை அவர் மறைக்க விரும்பும் பொதுநலன் உள்ளது என்பது அவர் தரப்பு வாதங்கள் கூறவில்லை. எனவே இந்த மனு விசாரணைக்கு ஏற்றது அல்ல. மேலும் பேஸ்புக் கூகுள் யூடியூப் ஆகிய வலைதளங்களில் அவருடைய புகைப்படங்களை நீக்குமாறு கோரிக்கை விடுப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் பேஸ்புக் நிறுவனத்திற்கு 2 லட்சமும், கூகுள் மற்றும் யூட்யூப் ஆகிய இணையதளங்களுக்கு தலா ஒரு லட்சமும் வழக்கு செலவுக்காக அவதாரமாக வழங்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.