தூத்துக்குடி, ஜூன் 17- தூத்துக்குடியில் உள்ள இந்தியன் வங்கி மேலூர் கிளையில் சமூக இடைவெளி இன்றி மக்கள் கூட்டமாக நிற்பதால் கொரோனா பர வல் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தூத்துக்குடியில் இந்தியன் வங்கி மேலூர் கிளையில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. முதியோர் பென்சன், நகைக் கடன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிக்கு உள்ளூர் நகர மக்கள் மட்டுமின்றி கிராமப்புற மக்கள் அதிகமாக வருகின்றனர். தற்போதைய சூழலில் மக்கள் ஒன்றாக கூடி யிருப்பது கொரோனா சமூக பரவலை ஏற்ப டுத்தி விடுமோ? என்ற அச்சத்தை மக்களி டையே ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் சமூக இடை வெளியை கடைபிடிக்க டோக்கன் முறையை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வெளியே கூட்டமாக நிற்கும் வாடிக்கையாளர்கள் வங்கிக்குள் ஒருவர் பின் ஒருவராக அனுப்பப்படுகிறார்கள். இத னால் ஊழியர்களின் நலனில் மட்டும் வங்கி நிர்வாகம் அதிக கவனம் எடுத்துக் கொள்வ தாகவும், வாடிக்கையாளர்களின் நலனில் அக்கறையின்றி கூட்டம் கூட்டமாக வாசலில் நிற்க வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந் துள்ளது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.