தூத்துக்குடி, ஆக.18- தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில் சுகா தார பிரிவினர் சார்பில் 53 வது வார்டு பகுதியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வ தற்காக கடந்த 9.2.2020 அன்று தூய்மை காவலர் சாமுவேல் என்ற சாம் சென்றுள்ளார். அங்கு பட்டியலின பெண்களிடம் ஆபாச மாகவும், ஒருமையிலும் பேசி விட்டு சென்றுள்ளார். இதையடுத்து தொலைபேசி உரையாடலில் பட்டியலின பெண்களையும், பொதுமக்களை யும் அறுவறுக்கதக்க வகையில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள் ளார். இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்களை ஜன நாயக அமைப்புகள் சார்பில் திங்களன்று காலை தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலம் ஒன்பதாவது டிவிஷன் அலுவல கத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து டவுன் டிஎஸ்பி கணேசன் பேச்சுவார்த்தை நடத்தி யதில் தூய்மை காவலர் சியாம் என்ற சாமுவேலை பணி நீக்கம் செய்வது, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டியின் மீது துறை ரீதி யான நடவடிக்கை எடுப்பது, குற்றங்களுக்கு ஏற்றார் போல் வழக்கு பதிவு செய்வோம் உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப் பினர் இரா.பேச்சிமுத்து, புறநகர் செயலாளர் பா. ராஜா, ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூ மயில், காங்கிரஸ் கட்சி மாநில பேச்சாளர் மஜித், மாநகர துணை தலைவர் பிரபாகரன், திமுக பிரசாந்த், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம், ஒய்எம்ஜே மாவட்ட நிர்வாகி காதர் கனி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் சகாயராஜ், செயலாளர் பிச்சையா, ஊர் பொதுமக்கள் பரமசிவன், மருத ரத்தின ஆசிர் வாதம், ஜான்சிராணி மாடத்தி, லட்சுமி, முத்துலட்சுமி, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புற நகர குழு உறுப்பினர்கள் முரு கன், வெள்ளைச்சாமி, சுப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.