தூத்துக்குடி, ஆக.3- தூத்துக்குடி மாவட்ட டூரிஸ்ட் வேன், கார் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ரவிகுமார் தலைமையில் ஓட்டுநர்கள் சுமார் 100 பேர் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், ஊரடங்கு அமலில் உள்ளதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கபபட்டுள் ளது. எனவே, மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். இ-பாஸ் முறையை ரத்து செய்து தமிழகம் முழுவதும் வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்டவை கோரிக்கை விடுத்திருந்தனர்.