tamilnadu

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி துறைமுக ஊழியர்கள் தர்ணா

தூத்துக்குடி,அக். 23 - காலிப்பணியிடங்களை நிரப்பு தல் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் துறைமுக நிர்வாக அலுவலகம் முன்பு புதன்கிழமை  தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு டி எஸ் யு தலைவர் பால கிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆனந்தகுமார், சுதீந்திர குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். டிஸ்யூ துணைப்பொதுச்செயலாளர் ஈஸ்வரமூர்த்தி துவக்கி வைத்து பேசினார். சிஐடியு மாவட்ட செயலா ளர் ரசல், துறைமுக சங்க மாவட்ட செயலாளர் காசி, சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து,கோபால்  உள்ளிட்டோர் கண்டன உரையாற்றி னர். மீனாட்சி சுந்தரேசன் நன்றி உரை யாற்றினார். துறைமுகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை  காண்ட்ராக்ட் ஊழி யர்களை  கொண்டு  நிரப்ப வேண்டும், துறைமுகத் திற்கும் நாட்டிற்கும் இழப்பை ஏற்படுத்தும் அனைத்து தனியார் திட்டங்களுக்கும் அனுமதி வழங்கக்கூடாது, தலைமை ஆடிட்டர் ஜெனரலால் சுட்டிக்காட்டப்பட்ட துறைமுகத்திற்கு இழப்பு ஏற்படுத்திய தனியார் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், துறைமுக மருத்துவமனைகளை தனியாருக்கு BOT அடிப்படையில் தாரைவார்க்க கூடாது,1.01. 2004 பின் பணியில் சேர்ந்த துறைமுக தொழிலாளிகளை பழைய பென்ஷன் திட்டத்திற்கு கொண்டு வரவேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கும் உத்தரவை அமல்படுத்த வேண்டும், தொழிலாளிக்கு ஓராண்டு கடந்த பின்னும் இதுவரை வழங்காத ஏசிபி பதவி உயர்வை உடனே வழங்க வேண்டும் அனைத்து துறைமுகங்களிலும் லேபர் டிரஸ்க ளை உடனே நியமனம் செய்ய  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி போராட்டம் நடை பெற்றது.