tamilnadu

மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல்  இடஒதுக்கீடு கேட்டு ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி: மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு நாள் வேலைத் திட்டத்தை இரு நூறுநாட்களாக்கவும், நான்கு மணி நேர வேலையும் முழு ஊதியமும் வழங்கிட வேண்டும். அனைத்து சமூக பாதுகாப்பு திட்டங்களில் மற்றவர்களை விட மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 25% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் கழுகு மலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் கயத்தாறு ஒன்றி யச் செயலாளர் சாலமன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் கருப்பசாமி, நகரத்தலைவர் காளிராஜ், நகர செயலாளர் மரியாஜ் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.