tamilnadu

img

சிபிஎம் மக்கள் சந்திப்பு இயக்கம்

தூத்துக்குடி, ஆக.24- வருமான வரி கட்டாத அனை த்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7500 நிவாரணம் வழங்க வேண்டும். நூறு நாள் வேலையை இருநூறு நாளாக உயரத்த வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோ ரிக்கையை வலியுறுத்தி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவளம் மீனவர் காலனியில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம், முனியசாமி, மாதர் சங்க கிளைச் செயலாளர் செல்வி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இரா பேச்சிமுத்து, புறநகர் செயலா ளர் ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் பூமயில், புறநகர் குழு உறுப்பினர் டேனியல் ராஜ் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் எட்டைய புரம் தாலுகா ரணசூர்நாயக்கன் பட்டியில் நடைபெற்ற பிரச்சார இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டத்தி ற்கு கட்சியின் கிளைச் செயலாளர் ராமர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்சுணன், தாலுகா செயலாளர் கு.ரவீந்திரன், தாலுகா குழு உறுப் பினர் பாலமுருகன், கண்ணன் வைரவசாமி, எட்டப்பன், விதொச கிளைச் செயலாளர் பொன்னு மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். விளாத்திகுளம் பகுதியில் விளாத்திகுளம், சுப்பிரமணிய புரம், நாகலாபுரம் ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர்கள் கந்த வேல், கிருஷ்ணமூர்த்தி, ஜோதி  ஆகியோர் தலைமை தாங்கினர். தாலுகா செயலாளர் புவிராஜ், தாலுகா குழு உறுப்பினர்கள் ராம லிங்கம், சேகர், யோவான் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.