தூத்துக்குடி, ஜூலை 24- மத்திய அரசின் சிபிஎஸ்சி நிர்வாகம் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் 220 முதல் 224 வரை உள்ள ஐந்து பக்கங்களில் பெரியார் பற்றிய பாடகுறிப்பு கள் இடம் பெற்று இருந்தது. இதை சமீபத்தில் மத்திய அரசு கொ ரோனா கால சூழலை பயன் படுத்தி பெரியார் பற்றிய தகவல் களை நீக்கியுள்ளது. எனவே நீக்கப்பட்ட பெரியார் பற்றிய பாடத்தை மீண்டும் சேர்க்க வலி யுறுத்தி சிபிஎம் தூத்துக்குடி புறநகர் சார்பில் முத்தையாபுரம் பல்கு பஜாரில் வைத்து வாசிப்பு இயக்கம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் பேச்சிமுத்து தலைமை வகித்தார். புறநகர செயலாளர் ராஜா, சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.ரசல், மாதர் சங்க மாவட்ட செயலா ளர் பூமயில், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் டேனியல் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.
நாகர்கோவில்
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாநகர செயலாளர் கே.மோகன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அக மது உசேன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி, மாநகர குழு உறுப்பினர்கள் அஸீஸ், பெஞ்சமின், பரமசிவன், ராஜநாயகம் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.