தூத்துக்குடி:
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி இயங்கி வருகிறது. இந்நிலையில் வங்கியின் ஊழியர்கள் தமது ஒரு நாள் சம்பளத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நன்கொடையாக வழங்கினர். வங்கி ஊழியர்களின் பங்களிப்புடன் வங்கியும் இணைந்து ரூ.1.5 கோடி நன்கொடையாக அளித்தது.
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாகஅதிகாரி கே.வி. ராமமூர்த்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1.5 கோடிக்கு காசோலையை நன்கொடையாக வழங்கினர். அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.