தூத்துக்குடி, ஜூலை 14- தூத்துக்குடிமாவட்டம் குளத்தூ ரில் கடந்த ஜுலை மாதம் 3 ஆம் தேதி நடந்த சோலைராஜா, ஜோதி என்ற பேச்சியம்மாள் தம்பதிகள் சாதி ஆண வப் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக கணடன ஆர்ப்பாட்டம் மாவட்டதலைவர் ஆர்.விஜயலட்சுமி தலைமையில் நடை பெற்றது. குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், சோலை ராஜா குடும்பத்தை பாதுக்காக்க வேண்டும், சோலைராஜா சகோதரி சோலைரதிக்கு அரசுப்பணி வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட சோலை ராஜா குடும்பத்துக்கு 25 லட்சம் நிவா ரணம் வழங்க வேண்டும் ,சாதிமறுப்பு திருமணம் செய்பவர்கள் அனைவரை யும் பாதுகாக்க வேண்டும் என வலி யுறுத்தி மாதர் சங்க மத்தியக் குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய் ,எஸ்.லட்சுமி, பி.பூமயில், தீண்டாமை ஒழிப்பு முன்ணனி அமைப்பு மாவட்ட தலைவர் பொன்ராஜ் ஆகியோர் பேசி னர். மாவட்ட பொருளாளர் ராமலட்சுமி, மாவட்ட துணைச்செயளார் எம்.கமலா, மாவட்டகுழு உறுப்பினர்கள் உட்பட நுற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.