tamilnadu

தந்தையை தற்கொலைக்கு  தூண்டிய மகன்கள் மீது வழக்கு

தூத்துக்குடி, மார்ச் 7- தந்தையை தற்கொலைக்கு தூண்டியதாக 2  மகன்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை சிலுவைபுரம், மாதா கோவில் தெருவைச் சேர்ந்த வர் பொன்னம்பலம்(70). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதி்ல், 2வது மகன் மாரிமுத்து (32), 3-வது மகன் மாயாண்டி (25) ஆகிய இருவரும் சொத்தை பிரித்து தரும்படி தகராறு செய்து தந்தையை தாக்கியுள்ளனர். இதனால், பொ ன்னம்பலம் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்  பதிந்து மகன்கள் 2பேரையும் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வந்த அவர்கள் மீண்டும் தந்தை யுடன் தகராறு செய்துள்ளனர். இதனால் மனவே தனையடைந்த பொன்னம்பலம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தந்தையை தற்கொலைக்கு தூண்டியதாக மாரி முத்து, மாயாண்டி ஆகியோர் மீது புதுக்கோ ட்டை இன்ஸ்பெக்டர் விமலா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.