tamilnadu

img

நன்கொடை கேட்டு மிரட்டிய பாஜக இளைஞரணி செயலாளர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தனியார் ஆலையில் நன்கொடை கேட்டு மிரட்டிய பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பூபதி கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வேலவன் பகுதியில் கிருஷ்ணா புளு மெட்டல்ஸ் என்ற தனியார் கிரஷர் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு நேற்று மாலை பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பூபதி உள்ளிட்டோர் சென்று நன்கொடை கேட்டுள்ளனர். அப்போது, ஆலை நிறுவனர் இல்லாததால் பின்னர் வருமாறு பேலாளர் கூறிய நிலையில், பாஜகவினர் மிரட்டல் விடுத்துள்ளனர். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பாஜகவினர் சொகுசு கார்கள் நிறுத்தி லாரிகளை ஆலைக்குள் செல்ல முடியாதவாறு வழிமறித்துள்ளனர். இதை அடுத்து ஆலை நிர்வாக மேலாளர் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், பூபது கைது செய்யப்பட்டார்.