tamilnadu

மதுரை - திருநெல்வேலி மண்டலங்களுக்கிடையே பொதுப் போக்குவரத்து தொடங்க கோரிக்கை

தூத்துக்குடி, ஜூன் 7- அண்டை மாவட்டங்க ளுக்கு இடையேயான பகு தியில் பொதுமக்கள் நடந்து செல்லும் நிலையை தடுக்க மதுரை - திருநெல்வேலி மண்டலங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்தை தொடங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தன. இந்நி லையில் தமிழக அரசு பொதுப் போக்குவரத்தை அண்மையில் செயல்பட அனுமதித்தது. இதில் 8   மண்டலங்களாகப் பிரிக்கப் பட்டு மண்டலங்களுக்கு இடையேயான போக்கு வரத்தை தடை செய்தது.  இதையடுத்து, திருநெல் வேலி மண்டலத்திற்கு உள் பட்ட தூத்துக்குடி, திருநெல் வேலி, கன்னியாகுமரி, தென்காசி பகுதிகளில் பொ துப் போக்குவரத்து செய பட்டு வருகிறது. ஆனால் தூத்துக்குடி மாவட்ட எல்கையான சாத் தூர் செல்வதற்கும், அப்ப குதி பொதுமக்கள் கோவில் பட்டி வருவதற்கும் பொதுப் போக்குவரத்து வசதி இல்லை.

மேலும், குறிப்பாக கோவில்பட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதி வணி கர்கள் கொள்முதல் செய்வ தற்கு மதுரை செல்வதும் உண்டு. மண்டலங்களுக்கு இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் கொள்முதல் செய்வ தற்கும், மருத்துவப் பரிசோ தனைக்கும் மதுரைக்குச் செல்வதற்கு சிரமம் ஏற்பட் டுள்ளது. குறிப்பாக, கோ வில்பட்டியையடுத்த சாத் தூர், சிவகாசி, விருது நகர் பகுதி பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்டத்திற் குள் நுழைய வேண்டு மென்றால் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு வரை ஆட்டோ உள்ளிட்ட வாகனங் களில் வந்து அங்கிருந்து நடந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு  மண்டலங்களுக்கு இடையே யான பொதுப் போக்குவ ரத்தை உடனடியாக தொடங்க  வேண்டும். குறிப்பாக, மாவட்ட எல்கைக்கு உள்பட் டோர் அத்தியாவசியப் பணிக்கு  உள்ளே வர அனுமதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும்  மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து  தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பு மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,  தூத்துக்குடி, நாகர்கோவில், திரு நெல்வேலி, தென்காசி ஆகிய  மாவட்டங்களை மதுரை மண்டலத்துடன் இணைத்து பொதுப் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.