தூத்துக்குடி, ஜூன் 6 வங்கி கடன் தவணை தொகை செலுத்த மத்திய அரசு 6மாதகால அவகாசம் வழங்கி உள்ள நிலையில் கடன் தவணை தொகையை செலுத்துமாறு மகளிர் சுய உதவிக் குழுக்க ளுக்கு நெருக்கடி தரும் நிதிநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்ப டும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- நாடு முழுவதும் கொ ரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. மக்களும் வாழ்வாதாரம் இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். மத்திய அர சும், ரிசர்வ் வங்கியும் முதல் கட்டமாக கடன் தவணை தொகை திருப்பி செலுத்த மார்ச்-2020 முதல் 31.08.2020 வரையிலான 6மாதகால அவ காசம் வழங்கியுள்ளது. கடன் தவணை தொகையையும், வட்டி தொகையையும் 6மா தம் கழித்தே பெற்றுக்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக/நகர்ப்புற பகுதியில் மகளிர் சுய உத விக் குழுவினர் வாங்கிய கடனுக்கான தவணை தொகை மற்றும் வட்டியை செலுத்து மாறு அரசு மற்றும் தனியார் வங்கிகள், கூட்டு றவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் நெருக்கடி தருவதாக புகார்கள் வந்துள்ளன. மகளிர் சுய உதவிக் குழுக்கள் தாங்களாகவேமுன் வந்து கடன் தவணை தொகையை திருப்பி செலுத்தி னால் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் அதனை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு மாறாக அரசு வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், நிதிநிறுவனங்கள் கடன் தவணை மற்றும் வட்டி தொகையை உட னடியாக செலுத்துமாறு மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நெருக்கடி தந்தால் இந்த நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவ டிக்கை எடுக்கப்படும். எனவே, வங்கிகளும், நிதிநிறுவனங்க ளும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி கடன் தவணை தொகையை திருப்பி செலுத்துவ தற்கு 6 மாதகால அவகாசம் வழங்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சிறப்புக்கடனாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.6.73கோடி வழங்கப்பட்டுள் ளது. மேலும், கடனுதவி தேவைப்பட்டால் மகளிர் திட்ட அதிகாரிகள் அதற்கான ஏற்பா டுகளை செய்யத் தயாராக உள்ளனர். எனவே, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் பெற முறையான வழிகளை பின்பற்ற அந்தந்த கிராம பஞ்சாயத்து அளவிலான சுய உதவிக் குழு கூட்டமைப்புகள் ஏற்பாடு செய்ய வேண்டும். தவணை தொகையை திருப்பி செலுத்த வாய்ப்பு இல்லாத மகளிர் குழுக்கள் 6மாத தவணை நீட்டிப்பு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.