tamilnadu

img

மருத்துவக்குழு அறிக்கைக்கு பிறகே திரையரங்குகளை திறப்பது குறித்து முடிவு.... அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

தூத்துக்குடி:
மருத்துவ நிபுணர் குழுவின் அறிக்கையை பெற்ற பின்னரே திரைய ரங்குகளை திறப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று செய்தி - விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

நாடு முழுவதும் மீண்டும் திரையரங்குகளை திறப்பது குறித்து மத்திய அரசு செப்டம்பர் 8 ஆம் தேதி ஆலோசனை மேற்கொண்டது.இதை தொடர்ந்து ஐபிஎல், உலகக் கோப்பை, ஒலிம்பிக் போன்ற விளையாட்டுப் போட்டிகளை திரைய ரங்குகளில் ஒளிபரப்ப அனுமதி தேவை என்றுதிரையரங்க உரிமை யாளர்கள் சங்கம் தெரி வித்துள்ளது. இந்நிலையில் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவ நிபுணர் குழுவின் அறிக்கையை பெற்ற பின்னரே தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது பற்றி முடிவு செய்யப்படும். திரையரங்குகள்  திறக்கப் படும்போது மக்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வில்லை எனில் பாதிப்பு ஏற்ப டும்.ஆட்சியாக இருந் தாலும், கட்சியாக இருந்தா லும் அதிமுகவுக்கு இரு மொழிக் கொள்கைதான் என்று தெரிவித்தார்.

;