தூத்துக்குடி, ஜூலை 11- ஏரல் சுற்று வட்டாரப் பகுதிகளில் கொரோனா பரவாமல் இருக்க ஒரு வார காலத்திற்கு கடைகளை அடைக்க வியாபாரி கள் முடிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சளி மாதிரிகள் சேகரித்து பரிசோதனை நடத்தப்பட்டு வரு கிறது. இது போல் ஏரல் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கொரோனா தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், வட்டாட்சியர் அற்புத மணியம்மாள் மற்றும் ஏரல் வட்டார வியாபாரிகள் சங்க தலைவர் தசரத பாண்டியன் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஒரு வார காலம் அதாவது ஞாயிற்றுக் கிழமை முதல் அடுத்த ஞாயிறு வரை கடைகளை அடைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் துணை வட்டாட்சியர் வட்டாட்சியர் சேகர், காவல் உதவி ஆய்வாளர் முருகப் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொற்று பரவாமல் தடுக்க இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.