தூத்துக்குடி, ஆக.2- கொரோனா தொற்று தடுக்கும் பொருட்டு ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற் றுக்கிழமைகளிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமி ழக அரசு அறிவித்தது. அதன்படி ஞாயி றன்று தூத்துக்குடி மாவட்டத்திலும் தளர் வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. இந்நிலையில் முழு ஊரடங்கின் போது வெளியே சுற்றிய சுமார் 50 பேரை காவல்துறையினர் நிறுத்தி அறிவுரை வழங்கினர். இதுகுறித்து மாவட்ட எஸ்பி., ஜெயக்குமார் கூறுகையில், ஊரடங்கை மீறுவோர் மீது வழக்குப்பதிந்து வாக னங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வரு கிறது. அந்த வகையில் பறிமுதல் செய்யப் பட்ட 3212 வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இன்னும் 190 வாகனங்கள் ஒப்படைக்கப்பட உள் ளன என்றார்.