tamilnadu

பணம் கேட்டு மிரட்டல்: 3 பேர் கைது

தூத்துக்குடி, ஜூன்1 தூத்துக்குடியில் மது குடிக்க பணம் கேட்டு வாலிபரை மிரட்டியதாக 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  தூத்துக்குடி அண்ணா நகர் 12வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் ராஜேஸ் (27), இவர் ஞாயிறன்று பொன்னகரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே வந்து கொண்டிருந்த போது, 3பேர் அவரை வழிமறித்து மது வாங்க பணம் கேட்டு தகராறு செய்துள்ள னர். அவர் பணம் இல்லை என்று கூறிய தால் 3பேரும் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.  இதுகுறித்து வடபாகம் காவல் நிலை யத்தில் ராஜேஸ் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக் குப் பதிந்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக நடராஜபுரத்தைச் சேர்ந்த ரவிகுமார் (53), செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் (42), துரைசிங் நகரைச் சேர்ந்த ஆதிலிங்கம் (39) ஆகிய 3பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

;