தூத்துக்குடி, ஜூன் 4- தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 11பேர் குணமடைந்ததால் அவர் களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோ னாவால் பாதிக்கப்பட்டோரில் இருவர் உயிரிழந்துள்ளா். இதுவரை 157 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொரோனா பிரிவில் 136 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட் டம் தென்திருப்பேரை, காயல்பட்டினம் பகுதிகளைச் சோ்ந்த 17 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட் டோரின் எண்ணிக்கை 294ஆக உயர்ந் துள்ளது.
இதனிடையே 11 நோயாளிகள் குணமடைந்ததால் அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்க்ள. மேலும், இலங்கையிலிருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி வஉசி துறைமுகத் துக்கு வந்தோரில் தூத்துக்குடி மாவட் டத்தைச் சேர்ந்த 58 பேரும் அரசு பாலி டெக்னிக் கல்லூரியில் தனிமைக் கண்கா ணிப்பு மையத்தில் வைக்கப்பட்டனர். அவர் களது ரத்தம், சளி மாதிரிப் பரிசோதனை யில் யாருக்கும் கரோனா இல்லை என நேற்று தெரியவந்தது. வெளி மாநி லங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வருவோரைக் கண்காணிக்க தூத்துக்குடி மாவட்ட எல்லைப் பகுதியில் 15 இடங்க ளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. அதில், காவல், வருவாய், சுகாதாரத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினா் 24 மணி நேரமும் கண்கா ணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.