tamilnadu

img

தூத்துக்குடி துறைமுக ஊழியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

தூத்துக்குடி
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகேயுள்ள பெரியசெல்வம் நகரைச் சேர்ந்தவர் வின்சென்ட் (59), இவரது மனைவி ஜான்சி (56). இந்த தம்பதியருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். வின்சென்ட் தூத்துக்குடி துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டராக வேலைபார்த்து வருகிறார். வியாழக்கிழமை இரவு தம்பதியர் இருவரும் வீட்டின் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவில் காம்பவுண்ட் சுவர் ஏறிக்குதித்த மர்ம நபர்கள், ஜன்னல் வழியாக சாவியை எடுத்து வீட்டை தம்பதியர் உறங்கிக் கொண்டிருந்த இருந்த அறையை வெளிபக்கமாக பூட்டியுள்ளனர்.

பின்னர், மற்றொரு அறையில் பீரோவில் இருந்த 100 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வெள்ளியன்று காலை எழுந்த, தம்பதியர் கதவு வெளிபக்கமாக பூட்டியிருந்ததால் கதவை உடைத்து வெளியே வந்த  பார்த்தபோது, வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
 

;