தூத்துக்குடி, ஜூன் 17- தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள குரங்கனி, சன்னதி தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி அரசகுமாரி (53). கணவன்-மனைவி இருவரும் செவ்வா யன்று மாலை ஏரல் பஜாருக்கு பொருட்கள் வாங்கச் சென்றுள் ளனர். பின்னர் இரவு 7 மணியளவில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த மோதிரம், செயின் உள்ளிட்ட 10 பவுன் நகைகள் திருடு போயிருந்தது. இது குறித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் அரச குமாரி அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்து வீரப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.