tamilnadu

img

அந்தமான் நிகோபார் மக்களைக் காப்பாற்றுங்கள்

போர்ட்பிளேரில் ஒரே ஒரு கொரோனா மருத்துவமனை பரிசோதனை முடிவுகள் தெரியாமலே பலியாகும் துயரம் - பிரதமருக்கு சீத்தாராம் யெச்சூரி கடிதம்

புதுதில்லி, ஆக.13 - அந்தமான் நிகோபார் தீவுகளில் கொரோனா தொற்று நோயால் மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்; அவர்களைப் பாது காக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பிரதமர்  நரேந்திரமோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி கடிதம் எழுதி யுள்ளார். ஆக.13 வியாழனன்று சீத்தாராம் யெச்சூரி எழுதியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது:- அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள உங்களது கட்சியின் (பாஜக) ஊழியர்களுக்கு நீங்கள் உரை யாற்றியது தொடர்பான ஊடகச் செய்தி களை கவனித்தேன். அத் தீவுகளுக்கு அதிவேக பிராட்பேண்ட் இணைய தொடர்பு வசதிகளை செய்துதருவ தாக மீண்டும் அறிவித்திருக்கிறீர்கள். இது இந்திய அரசால் பல ஆண்டு களுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒரு பணியாகும். கிடைத்துள்ள தகவல் களின்படி, சென்னையிலிருந்து கடலுக்கு அடியில் கேபிள்களை கொண்டு செல்லும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. எனினும், அந்த மான் நிகோபார் தீவுகளின் மக்களது வாழ்வியல் நிலைமைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மிகவும் வரவேற்கத்தக்கதே.

கொரோனா தொற்றுநோய் பரவ லால் மிகக்கடுமையான சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்தத் தரு ணத்தில், அத்தீவுகளின் மக்களது வாழ்வைப் பாதுகாக்கவும், நிவாரணம் அளிக்கவும் மத்திய அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்த மான் தீவுகளுக்கும் நிகோபார் தீவுகளுக்கும் இடையே அதிக தூரம் இருக்கிறது என்பதை நாம் அறி வோம். கொரோனா பாதிப்பும் மரண ங்களும் அதிகரித்து வரும் நிலை யில், இந்த ஒட்டுமொத்த தீவுகளுக்கும் சேர்த்து தலைநகர் போர்ட்பிளேரில் மட்டும் ஒரே ஒரு கொரோனா பரிசோ தனை மையமும் ஒரே ஒரு கொரோனா சிகிச்சை மருத்துவமனை யும் இருக்கிறது என்பதை கவலை யுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இங்கு எடுக்கப்படும் பரிசோத னைக்கு முடிவுகள் தெரிய எட்டு  நாட்களாகிறது. அதற்குள் சம்மந்தப் பட்ட நோயாளி மிகுந்த கவலைக் கிடமான நிலைக்குச் செல்கிறார்; மீட்க முடியாத அளவிற்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட துயரங்களுக்கு ஆளா கிறார். மேற்கண்ட கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் பணியாற்றிய 18 மருத்துவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஒட்டுமொத்த பிரதேசத்தின் சரிபாதி மக்கள் வடக்கு அந்தமான் தீவு களில் தான் வசிக்கிறார்கள். இத் தீவுகள், தலைநகர் போர்ட்பிளேரி லிருந்து வெகு தொலைவில் உள்ளன. இத் தீவுகளிலிருந்து, போர்ட்பிளேர் கொரோனா மருத்துவமனைக்கு ஒரு நோயாளி வந்தடையவே பல நாட்கள் ஆகின்றன. இந்த நிலைமையில் இத் தீவு களில் கூடுதலான கொரோனா பரி சோதனை மையங்கள் உடனடியாக திறக்கப்படுவது அவசியமாகும்; பரிசோ தனை எடுப்பதற்கும் முடிவுகளை அறி விப்பதற்குமான காலம் கட்டாயம் குறைக்கப்பட வேண்டும்; அதற்கேற்ற வாறு கூடுதல் வசதிகளை உடனே செய்திடவேண்டும்; இத் தீவுகளின் பல பகுதிகளில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை யளிக்கும் திறனுடன் கூடிய மருத்துவ மையங்கள் உடனடியாக திறக்கப்பட வேண்டும்; போர்க்கால அடிப்படை யில் இப்பகுதி மக்கள் அனை வருக்கும் நிவாரண உதவிகள் செய்யப்பட வேண்டும்.

அந்தமான் நிகோபார் தீவுகள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள, மத்திய அரசின் நேரடி நிர்வாகம் நடக்கிற ஒரு யூனியன் பிரதேசமாகும். இத் தீவுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அமைப்புகள் ஏதுமில்லை. எனவே மத்திய அரசின் நிர்வாகத்தைத் தவிர உதவி கேட்பதற்கு இம்மக்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை. எனவே, அந்தமான் நிகோபார் தீவுகள் உங்களது அரசாங்கத்தின் நேர டிக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்கிற முறையில், அங்கு போர்க்கால அடிப்படையில் மேலே குறிப்பிட்டுள்ள உடனடி நடவடிக்கைகளை அவசரமாக செய்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

  (ஐஎன்என்)

 

;