tamilnadu

சாலை விபத்தில் ஒருவர் பலி

திருவில்லிபுத்தூர்:
சிவகாசி அருகே உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் வேல்பாண்டி வயது (18) சிவகாசிகல்லறைத் தெருவைச் சேர்ந்தவர் வைர பிரகாஷ் வயது(18) இருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர். ஞாயிறன்று இருவரும் செண்பகத்தோப்பில் குளித்துவிட்டு மாலையில் இருசக்கர வாகனத்தில் வீட் டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர். தைலாகுளம் விலக்கு அருகே செல்லும்போது நிலைதடுமாறி சாலையோரம் இருந்த புளியமரத்தில் இருசக்கர வாகனம் மோதியது இதில் வைரபிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேல்பாண்டி திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

;