tamilnadu

img

அமைச்சர் நிகழ்ச்சிகள் ரத்தாகுமா? கொரோனா பரவும் அச்சத்தில் அரசு ஊழியர்கள்-செய்தியாளர்கள்

திருவாரூர், ஜுலை 11- தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வை ரஸ் நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. திருவாரூர்  மாவட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல. கிராமப்புறங்களிலும் பரவலாக  நோய்த்தொற்று கண்டறியப்பட்ட தால் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மத்திய பல்க லைக்கழகம் மற்றும் அரசு மருத்து வமனைகள், அரசு கல்லூரி வளா கம் என கொரோனா நோயாளிக ளுக்கு சிகிச்சை அளிக்கும் இடங்கள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையிலும் சமூக பர வல் ஏற்படவில்லை என்கிறது அரசு. ஆளுங்கட்சி அமைச்சர் களும், மக்கள் பிரதிநிதிகளும் பாது காப்பற்ற நிலையில் நிகழ்ச்சி களில் பங்கேற்பதால் நோய்த் தொற்று பரவுவதை சந்தே கத்திற்கு இடமில்லாமல் உணர முடி யும்.  தமிழக அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், பி.தங்கமணி, செல்லூர் ராஜூ, முன்னாள் அமை ச்சர் பா.வளர்மதி, சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் நோ ய்த்தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை  பெற்று வருகின்றனர். இந்நிலையில் சாமானியர்களுக்கு அறிவுறுத்தப்ப டுகிற எந்த விதிகளுக்கும் தன்னை உட்படுத்திக் கொள்ளாமல் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். குறிப்பாக அவரது சட்டமன்ற தொகுதியான நன்னிலம் தொகுதியில் “தேர்தல் கணக்குகளை மனதில் வைத்து” தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்கள் மத்தியில் தன்னை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறார். இந்த  பேரிடர் காலத்தில் இது போன்ற நட வடிக்கையில் அவர் ஈடுபடலாமா என மக்கள் கேட்கின்றனர்.

அமைச்சரின் ஆய்வுக் கூட்டம்
ஒவ்வொரு சனி மற்றும் ஞாயி ற்றுக்கிழமைகளில் ஆய்வுக்கூட்ட ங்கள், செய்தியாளர்கள் சந்திப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கல்  என நடத்தி வருகிறார். இந்நி கழ்ச்சிகளில் தனிமனித இடை வெளி, முகக்கவசங்கள் அணிதல், கை கழுவுதல் என்ற பாதுகாப்பு நடைமுறைகள் பெரும்பாலும் கடைபிடிக்கப்படுவதில்லை. கூத்தாநல்லூர் வட்டாட்சியர் தொ டங்கி, செய்தியாளர் உட்பட பலரும்  நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ள னர். நான் பரிசோதனை செய்து  விட்டேன் எனக்கு நெகட்டிவ் வந்து விட்டது என்று கூறிக்கொண்டு தன்னை தனிமைப்படுத்திக் கொ ள்ளாமல் கூட்டம் கூட்டுவதிலேயே கவனமாக இருக்கிறார். அரசின் பிர திநிதி என்ற முறையில் செயல்ப டுவதாக காரணம் கூறினாலும் அறி வியல்பூர்வமாக இந்த போக்கை அமைச்சர் கைவிடுவது அவரு க்கும் அவரது குடும்பத்தினருக்கும், அவர் ஆதரவாளர்களுக்கும் கூட நன்மை பயக்கும். மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் நோய்த்தொற்று பணிகள் நடைபெற்றாலும் அமைச்சரின் இந்த தொடர் கூட்டங்கள் மூல மாக அரசு ஊழியர்கள், செய்தியா ளர்கள் அச்சத்திற்கு ஆளாகின்ற னர். மாவட்டம் முழுவதும் அவர் செல்லக்கூடிய அனைத்து இடங் களிலும் இதே நிலை தான் நிலவு கிறது. தமிழக முதலமைச்சர், அமைச்சர்களின் இத்தகைய போக்கு குறித்து ஊடகங்களில் பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது.  எனவே திருவாரூர் மாவட்ட மக் களின் நலன் கருதி தமிழக உண வுத்துறை அமைச்சர் மற்றவர்களின் உயிரை பணயம் வைக்கும் விளம்பர அரசியலை சமூக அக் கறையுடன் தற்காலிகமாகவா வது நிறுத்திக் கொள்வாரா..?