tamilnadu

img

தியாகி சிவராமன் நினைவு தினம்

மன்னார்குடி, மே 4- தியாகி சிவராமனின் 70-வது ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் ஜாம்பவனோடையில் தியாகி சிவராமன் நினைவு ஸ்தூபி அருகே நடைபெற்றது. சிபிஐ சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.உலகநாதன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.பாலசுப்பிரமணியன், சிபிஐ ஒன்றியச் செயலாளர் கே.முருகையன் முன்னிலை வகித்தனர். இடதுசாரி இயக்கத் தலைவர்கள் கே.வி.ராஜேந்திரன், உப்பூர் ராஜேந்திரன், பி.வி.கனகசுந்தரம், ஜி.துரைராஜ், ஆர்.வீரமணி, ஜே.குணசேகரன், தெட்சிணாமூர்த்தி, சிவசந்திரன், குணசேகரன், வெங்கடேஷ், முன்னாள் ஊராட்சி தலைவர் உமேஷ் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக இடதுசாரி இயக்கத் தலைவர்கள் அனைவரும் தியாகி சிவராமன் நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி முழக்கமிட்டு செவ்வணக்கம் செலுத்தினர்.விவசாயிகளுக்கான கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நெஞ்சுரமிக்கப் போராட்டங்களில் அச்சமின்றி பங்கேற்ற செம்போராளியும், அதன் காரணமாகவே காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்த தியாகி சிவராமனின் நினைவுகளை போற்றி தலைவர்கள் உரையாற்றினா். நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

;