tamilnadu

img

மஞ்சக்குடி பள்ளியில் ஆய்வுக் கூடம் திறப்பு டி.கே.ரங்கராஜன் எம்.பி. பங்கேற்பு

குடவாசல் ஜூன் 13- திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மஞ்சக்குடியில் உள்ள டி.டி.கே.நரசிம்மன் சுவாமி தயானந்தா சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் டிகே.ரங்கராஜன் எம்பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து(2018-19 ஆம் ஆண்டு) ரூ.25  லட்சம் மதிப்பில் பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்காக அறிவியல் ஆய்வுக் கூடம் கட்டப்பட்டு புதன்கிழமை ஆய்வு கூட திறப்பு விழா நடைபெற்றது. அறிவியல் ஆய்வுக் கூடத்தை  திறந்து வைத்து எம்.பி., டி.கே.ரங்கராஜன் பேசினார். நிகழ்ச்சிக்கு டி.டி.கே.நரசிம்மன் சுவாமி தயானந்த சரஸ்வதி கல்வி குழும அறங்காவலரும் பள்ளி தாளாளருமான டாக்டர் சாந்தி ரங்கநாதன் தலைமை தாங்கி  வரவேற்று பேசினார். டி.டி.கே.பிரிஸ்டிஜ் நிறுவனரும், கல்வி குழு தலைவர் டி.டி.ஜெகநாதன், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் திருவாரூர் மாவட்டச் செய லாளர் எஸ்.தினகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கலைமணி, மாவட்ட குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா, ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.இன்பநாதன் மற்றும் கல்வி ஆர்வலர்கள், ஆசிரியர் கலந்து கொண்டனர்.  முன்னதாக சுகாதாரம் பற்றிய  விழிப்புணர்வு நாடகம் மாணவர் களால் நடத்தப்பட்டது. மேலும் கடந்த கல்வி  ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அவர்களின் மேல் படிப்புக்காக ரூ.25 ஆயிரம் ரூ.20  ஆயிரம், ரூ.15 ஆயிரம் என மூன்று மாணவர்களுக்கும் மற்றும் 10, 11ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கும் ரொக்கம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப் பட்டது. நிறைவாக தலைமை ஆசிரி யர் கே.பாஸ்கர் நன்றி கூறினார்.