tamilnadu

img

ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா

 குடவாசல், ஆக.4- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா, திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் நடைபெற்றது. விழாவிற்கு வட்டாரத் தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் மைதிலி, நவபாலன், சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரச் செயலாளர் கருப்பசாமி வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் வீரமணி துவக்கவுரையாற்றினார்.  மாநிலச் செயற்குழு உறுப்பினர் புவனேஸ்வரி சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் சித்ரா பேருரையாற்றினார். ஓய்வு பெற்ற ஆதிச்சமங்கலம் பள்ளி தலைமையாசிரியர் குமரமூர்த்தி, மணக்குண்டு பள்ளியின் தொழில் கல்வி ஆசிரியர் கரோலின் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. புதிய உறுப்பினர்களுக்கும், வட்ட, மாவட்ட நிர்வாகிகளுக்கும், செயற்குழு உறுப்பினர்களுக்கும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார நிர்வாகிகள் அந்தோணி பாஸ்கர், பழனி செல்வம் ஆனந்த், அருண்மாறன், ஏகராஜா, கலா, ஜெயக்கொடி, சுப்பம்மாள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர். நிறைவாக வட்டார பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

;