tamilnadu

img

திருவாரூரில் 4 புதிய பேருந்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 4 புதிய பேருந்தை மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேருந்து, திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூருக்கும், திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்து பழனிக்கும், மன்னார்குடி பேருந்து நிலையத்திலிருந்து கோயம்புத்தூருக்கும், நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சிக்கும்  என 4 பேருந்துகள் இயங்கப்படவுள்ளன. அவற்றில் இட வசதியுடன் கூடிய 52 பயணியர் இருக்கை, அவசர வழி பாதை, தீயணைப்பு சாதனம் உள்ளிட்டவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.