குடவாசல், மே 21- ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை சிதறிக் கிடக்கும் நிலையில் ஏழை- எளிய விவசாயத் தொழிலாளர்களின் வறுமை நிலையை போக்குவதற்கு குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.7,500 வழங்கிட வேண்டும் விவசாயத்திற்கு தேவையான விதை, இடுபொருட்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மனு கொடுக்கும் போராட்டம் நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. சிபிஎம் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் டி.வீரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் தியாகு.ரஜினிகாந்த் முன்னிலை வகித்தார். சிபிஎம் மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகமது உதுமான், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.எம்.லிங்கம், சீனி.ராஜேந்திரன், வசந்த.வரதராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் திருத்துறைப்பூண்டியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.