குடவாசல், ஆக.8 - திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் பழங்களத்தூர் கிராமத்திலிருந்து பல்வேறு கட்சியிலிருந்து விலகி 30 குடும்பங்க ளைச் சேர்ந்தவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கு நீடாமங்கலம் சிபிஎம் ஒன்றிய செயலாளர் சோம.ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். பழங்களத்தூர் கிரா மத்தில் இருந்து 30 குடும்ப உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர். அனை வருக்கும் செந் துண்டு அணிவித்து, கட்சி யில் இணைத்து கொண்டு புதிதாக அமை க்கப்பட்ட கொடிமரத்தில் செங்கொடியை மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி ஏற்றி வைத்தார். முன்னதாக மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.எஸ்.கலியபெருமாள்,பி.கந்தசாமி ஆகியோர் வரவேற்று பேசினர்.