tamilnadu

img

பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்த 25 குடும்பங்கள்

குடவாசல், ஆக.17- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றி யத்தில் உள்ள அன்னதானபுரம் ஊராட்சியில்  வாளூர், பன்னூர் ஆகிய கிராமங்கள் இருந்து  25 குடும்பங்கள் பல்வேறு அரசியல் கட்சி யில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைந்தனர். நன்னிலம் ஒன்றியம் அன்னதானபுரம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலா ளர் டி.வீரபாண்டியன் தலைமை வகித்தார். வாளூர் கிராமத்தில் கணேசன் தலைமையில் 15 குடும்பங்களும், பன்னூர் கிராமத்தில் 10 குடும்பங்கள் செல்வராஜ் தலைமையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி முன்னிலையில் கட்சியில் சேர்ந்தனர்.  அனைவரையும் வரவேற்று கட்சியில் இணைத்துக் கொண்ட மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி புதிதாக அமைக்கப்பட்ட கொடிமரத்தில் செங்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார்.