tamilnadu

img

கடற்கரையோர சவால்களும் ஆபத்துகளும் கருத்தரங்கம்

மன்னார்குடி, பிப்.3- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவாரூர் மாவட்டக்குழு சார்பில் கடற்கரையோர சவால்க ளும் ஆபத்துகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் கோட்டூர் ஒன்றியம் சித்த மல்லியில் ஞாயிறு அன்று நடைபெற்றது. சுற்றுச்சூழல் நிபுணர்கள் கடல்சார் அறி வியலாளர்கள் கடலோர பாதுகாப்பு நிபுணர்கள் மீனவர் அமைப்புத் தலை வர்கள் கலந்து கொண்டனர். சித்தமல்லி ஊராட்சி தலை வர் ஜெ சிவசங்கரி தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கலைவாணி மோகன் ஒன்றிய குழு உறுப்பினர் சுப்ரியா ரமேஷ் நொச்சியூர் ஊராட்சி தலை வர் மா இனிய சேகரன் செரு களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செ. நாகரத்தினம் புத்தகரம் ஊராட்சி மன்ற தலைவர் சி.மு.சிவஞானம் மாநில செயற்குழு உறுப்பி னர்கள் எல் பிரபாகரன் எம் சாந்தகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் தை.புக ழேந்தி வரவேற்புரையாற்றி னார். கருத்தரங்கத்தை மாநில துணைத் தலைவர் முனைவர் வெ. சுகுமாரன் துவக்கி வைத்து உரையாற்றி னார். இயக்கத்தின் கிழக்கு மண்டல ஒருங்கிணைப்பா ளர் எஸ்.ஞானசேகரன், தஞ்சை மாவட்ட தலைவர் வீ. நாராயணசாமி, மாவட்ட பொருளாளர் கே. ரமேஷ், திருவாரூர் மாவட்ட இணைச் செயலாளர் கே.கே. தியாகராஜன், மாவட்ட மைய நூலகர் ம. ஆசைத்தம்பி, மின்சாரத் துறை பொறியாளர் காந்தி லெனின் ஆசிரியர் கூட்டணி யின் மாவட்ட செயலாளர் அ. முரளி பிஏசிபி செயலாளர் எம்.என். பாலு, உள்ளிட்டோர் வாழ்த்தி உரையாற்றி னார்கள். கருத்தரங்கின் முதல் அமர்வில் திருவாரூர் மாவட்ட கடலோர ஆபத்து கள் மற்றும் பாதிப்புகள் என்ற தலைப்பில் துறைக்காடு மீனவர்கள் சங்க இயக்குநர் எஸ்எச் மீரா முகைதீன், ஆலங் காடு மீனவர்கள் சங்க தலை வர் வடிவேலு, கடலோர மீன வர்கள் சங்க தலைவர் ஏ. சூசைமாணிக்கம், திருவாரூர் மாவட்ட மீனவர்கள் சங்க தலைவர் கே. நிஜாமுதீன் ஆகியோர் உரையாற்றி னார்கள். இரண்டாவது அமர்வில் கடலுக்குள் மற்றும் டெல்டா பகுதிகளில் எடுக்கப்படும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல், கேஸ் குறித்து மாநில கருத் தாளர் வ. சேதுராமன் உரை யாற்றினார். மூன்றாவது அமர்வில் அலையாத்திக்காடுகள் தரும் பயன்கள் என்னும் தலைப்பில் தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் முனைவர் பா. ராம்மனோகர் உரையாற்றினார். நான்காம் அமர்வில் கடல்சார் ஆராய்ச்சி என்னும் தலைப்பில்  மீன்வளத்துறை அண்ணாமலை பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர் அந்தோனி கிறிஸ்டியன் பெலிக்ஸ் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆல்வின் விக்டர் ஆகியோர் உரையாற்றினர். திருவாரூர் தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்க ளின்  பொறுப்பாளர்கள் மு. முத்துக்குமார் லெ.முருகன்  வா. சுரேஷ் பு.பாரதிகண் ணன் கா. அன்பழகன் ஆகி யோர் கருத்தரங்க அமர்வு களை ஒருங்கிணைத்தனர். மாவட்ட பொருளாளர் வா. சுரேஷ் நன்றியுரையாற்றி னார்.  கருத்தரங்கில் கடலுக்குள் எடுக்கப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனே  தடுத்து நிறுத்திட வேண்டும் மற்றும் பிப்.8 9 சென்னையில் நடைபெறவிருக்கும் அகில இந்திய கடற்கரையோர மண்டல மாநாட்டில் தஞ்சை புதுக்கோட்டை திருவாரூர் மாவட்டங்களிலிருந்து இருபது பிரதிநிதிகள் பங் கேற்பது என்ற திர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. கருத்தரங்கில் ஐம்பது பிரதிநிதிகள் மற்றும் சித்த மல்லி அருகாமை கிராமங்க ளின் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பல தலைப்பு களில் திரையிடல் நிகழ்ச்சி யும் நடைபெற்றது.