tamilnadu

காலதாமத விடுமுறை அறிவிப்பால் பள்ளி மாணவ, மாணவிகள் அவதி

திருவாரூர்: கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனையொட்டி பள்ளிக் குழந்தைகள் மற்றும் மாணவர்க ளின் பாதுகாப்பு கருதி விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் திருவாரூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கையோடு முன்கூட்டியே அறிவிக்காமல் கால தாமதமாக விடுமுறை அறி விக்கப்பட்டதால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த அலட்சியமான நடவடிக்கைக்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இது குறித்து இச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இரா.சுர்ஜித் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, திருவாரூர் மாவட்டம் பெரும்பாலும் கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களை உள்ளடக்கியது. ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் கல்வி நிலையங்களில் பயின்று வருகின்றனர். குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.  இவர்கள் தங்கள் வசிப்பிடத்திலுருந்து பெரும்பாலும் அரசு பேருந்துகள் மூலமாகவும் பிற வழிகளாலும் தாங்கள் பயில்கின்ற கல்வி நிலையங்களுக்கு செல்கின்றனர். வடகிழக்கு பருவமழை பருவம் தவறி காலதாமதமாக கனமாக தொடர்ந்து பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் முறையாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தும் கூட திருவாரூர் மாவட்ட நிர்வா கம் அதனை கணக்கில் கொள்ளாமல் மிகவும் காலதாமதமாக பள்ளி விடுமுறை என்று அறிவிப்பதால் குழந்தைகள், மாணவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதனால் பெற்றோர்களும் மன உளைச்சலுக்கும் பதற்றத்திற்கும் ஆளாகின்றனர். செவ்வா யன்று காலை 08.15 மணியளவில் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டதால் பெற்றோர்களும் மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி னர். மாவட்ட ஆட்சியரின் இந்த அலட்சிய நடவடிக்கைக்கு பொதுமக்கள் பலரும் தங்களின் வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.  மாணவர்கள், குழந்தைகள் நலனில் அக்கறை இல்லாமலும், பெற்றோர்களின் மன உளைச்ச லுக்கு காரணமாகவும் காலதாமதமாக அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட நிர்வாகத்தை இந்திய மாணவர் சங்க திருவாரூர் மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது என தெரி வித்துள்ளார்.