மன்னார்குடி, ஆக.17- மன்னார்குடி முத்துப்பேட்டை கலை இலக்கிய மன்றத்தின் 32-வது ஆண்டு விழா ராம்மோகன் ராஜப்பா தலைமையில் நடைபெற்றது. கௌரவத் தலைவர் முனைவர் நா.ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். ஆர்.எம்.எஸ்.ஜி. நந்தகுமார் வரவேற்றார். உமறுப்புலவர் விருது பெற்ற கவியோசி நாச்சிகுளத்தார் கோவை மா.முத்தையா ஆகியோர் சிறப்புரையாற்றினர். கவிஞர்கள் பஷீர்அகமது. சுப.சிதம்பரம், கவிதாயினி ராதா கவிச்சரம் தொடுத்தனர். கே.வி.கண்ணன் நன்றி கூறினார். நாகை மாவட்டம் பொறையார் சர்மிளா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளியின் முதல்வர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர் செல்வம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.