tamilnadu

img

வீடு- நிலங்களை சொந்தமாக்க வேண்டும் சமய நிறுவனங்களுக்கு சாமி.நடராஜன் கோரிக்கை

திருவாரூர், செப்.17- இந்து சமய அறநிலையத் துறை யின் சட்டவிதி எண் 34-ன் கீழ் அனைத்து சமய நிறுவனங்களின் நிலங்களில் சாகுபடி செய்பவர் களுக்கு நிலங்களையும், குடி யிருப்போர்களுக்கு மனைகளையும், வணிகம் செய்பவர்களுக்கு கடைகளையும் சொந்தமாக்கிட வேண்டுமென தமிழ்நாடு அனைத்து சமய நிறுவன நிலங்களில் குடி யிருப்போர் மற்றும் சாகுபடி செய் வோர் பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் சாமி.நட ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.  திருவாரூரில் செவ்வாய்க்கிழ மையன்று மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பாக பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மாவட்ட அமைப்பாளர் ஜி.ரகுபதி தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் பங்கேற்று சாமி.நட ராஜன் மேலும் பேசுகையில், தமி ழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் பல்வேறு சமய நிறு வனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான நிலங்களை குத்தகைத்தாரர்களாக விவசாயி கள் சாகுபடி செய்தும், வீடுகளில் குடியிருப்பு வாசிகளும், சிறு குறு வணிகர்கள் வணிகம் செய்தும், வாழ்ந்தும் வருகின்றனர். இவர்க ளுக்கு அவ்விடங்களை சொந்த மாக்கி தரவேண்டும். நியாயமான விலை நிர்ணயம் செய்து அவற்றை கேரள மாநி லத்தை முன்மாதிரியாக கொண்டு தவணை முறையில் செலுத்தி பெற்று சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டு களாக எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் சாமானிய மக்கள் மற்றும் சிறு குறு விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தாத மாநில அரசு கள் இக்கோரிக்கையை நிறை வேற்றவில்லை.  1980 ஆண்டு வரை குறிப்பிட்ட அளவில் நிலம், மனைகள் சொந்த மாக்கப்பட்டுள்ளது. இதனைக் கவனத்தில் கொண்டு தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். ஆனால் அதற்கு மாறாக விலை வழிகாட்டும் முறைக்கும் சந்தை மதிப்பிற்கும் கூடுதலாக விலை நிர்ணயம் செய்து பயனாளிகளின் தலையில் நிதிச்சுமையை ஏற்றி நெருக்கடியில் தள்ளுகிறது.  மேலும் பணத்தைக் கட்டச் சொல்லி துன்புறுத்துவது அல்லது பயனாளிகளை ஆக்கிரமிப்பா ளர்கள் என்று சொல்லி சட்டவிரோ தமாக நிலங்களிலிருந்தும், வீடு களிலிருந்தும், வணிக நிறுவனங்க ளிலிருந்தும் வெளியேற்றுவது என்ற அராஜக செயலில் அரசும் அறநிலையத் துறையும் ஈடுபடுகி றது. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது.  விதி எண் 78 மற்றும் 79-ன் கீழ் நியாயமான விலை நிர்ணயம் செய்து பயனாளிகளுக்கு அவர் களின் அனுபவத்தில் உள்ள இடங் களை சொந்தமாக்கிட அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என் றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலிய பெருமாள், பாதுகாப்பு கூட்டமைப் பின் துணை அமைப்பாளர்கள் கே.தமிழ்ச்செல்வி, எஸ்.சாமிநாதன் மற்றும் விவசாய சங்க தலைவர்கள், பாதுகாப்பு கூட்டமைப்பின் அமைப்புக்குழு நிர்வாகிகள், சாகு படியாளர்கள், குடியிருப்பு வாசிகள் உட்பட சுமார் ஆயிரம் பேர் ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக் கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங் கப்பட்டது. இந்து சமய அற நிலையத் துறைக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்போருக்கும், சாகுபடி செய்வோருக்கும் வாடகை, குத்த கைத்தொகையை பல மடங்கு உயர்த்துவதை நிறுத்த வேண்டும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள வர்களுக்கு அரசே கிரயம் செய்து தர வேண்டும். 100 மடங்கு முதல் 500 மடங்கு வரை வாடகையை உயர்த்தி கடும் சுமையை குடியிருப்போர், வணிகம் புரிவோர்களை வாடகை செலுத்தாத ஆக்கிரமிப்பாளர்கள் என்று சட்ட உட்பிரிவு 78, 79 ஐ பயன்படுத்தி வெளியேற்றி சீல் வைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத் தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திருச்சிராப்பள்ளி
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகில் நடந்த போராட் டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கீர்த்தி பாண்டியன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், புறநகர் மாவட்டச் செயலாளர் சிதம்பரம், மாநகர் மாவட்ட தலைவர் முத்து ஆகியோர் பேசினர். போராட்டத்தில் முருகேசன், பிரகாசமூர்த்தி, குரு நாதன், ரங்கநாதன், சேகர், கருப் பையா, நடராசன், சிவக்குமார், தன பால், தெய்வநாயகம், விஜய குமார், முருகானந்தம் உள்பட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, மாவட்ட அமைப்பா ளர் சா.ஜீவபாரதி தலைமை வகித்தார். திருப்பனந்தாள் டி.ஜி. ராஜேந்திரன், மாரியம்மன் கோவில் என். பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண் ணன், மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார், மாவட்ட பொருளா ளர் எம்.பழனி ஐயா, மாவட்ட துணைச் செயலாளர் என்.கணே சன், அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.வாசு, சிபிஎம் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் என்.சுரேஷ் குமார், சிபிஎம் மாநகரச் செயலா ளர் என்.குருசாமி மற்றும் ஜி.பக்கிரி சாமி, ஆ.செல்வம், ஏ.நடராஜன், அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்ட 300க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட நிறை வில் அதிகாரிகளை சந்தித்து கோரி க்கை மனு அளிக்கப்பட்டது.