tamilnadu

மன்னார்குடியில் சாலை  விபத்து: 4 பேர் பலி

மன்னார்குடி, ஆக.16- மன்னார்குடியில் தஞ்சை சாலை காளவாய்கரை அருகே சனிக்கிழமை விடியற்காலை 2 மணி அளவில் நின்று கொண்டிருந்த டிரக்கின் மீது மற்றொரு சரக்கு லாரி மோதிய தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர்  காயம் அடைந்தார்.  உயிரிழந்தவர்கள் ஆலங்குடியைச் சேர்ந்த வெங்கடா சலம்(39), அறந்தாங்கியைச் சேர்ந்த பி.வெங்கடாசலம்(23), சேலம் தாராபுரத்தை சேர்ந்த சந்திரசேகர்(23), மேற்கு வங்க த்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளி கே.சுகு மார்ஜி(21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் இராஜபாளையத்தை சேர்ந்த மினி டிரக் ஓட்டுநர் ஆர்.ரமேஷ் (31) காயமடைந்தார். ரமேஷ் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி சட்டம்-ஒழுங்கு காவல்துறையினர் இறந்த வர்களின் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி உடல்கூராய்வு செய்து, வழக்கு பதிந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.