.மன்னார்குடி, மே 9- அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தி வெளி யிடப்பட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும். அகவிலைப்படி வழங்கப் பட வேண்டும் சரண் விடுப்பு மீண்டும் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி நீடாமங்க லம் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சின்னையன் தலைமை வகித்தார். ஆறு முகம் முன்னிலை வகித்தார். முன்னாள் தலைவர் கௌத மன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முருகை யன், சந்திரசேகர் உள்ளிட் டோர் வாழ்த்துரை வழங்கி னார்கள். தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலை வர் மகேஷ் நிறைவு உரை யாற்றினார். முத்து கிருஷ்ணன் நன்றி கூறினார். நாகப்பட்டினம்: இதே போல் நாகை ஆட்சியர் அலு வலகம் மற்றும் அனைத்து வட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் வட்ட மையம் சார்பில் நாகை அரசு மாவட்டத் தலைமை மருத் துவமனையில் வளாகத்தில் வட்டத் தலைவர் எம்.மேகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் எம்.தமிழ்வாணன், மாவட்டத் தலைவர் து.இளவரசன், செயலாளர் அ.தி.அன்பழ கன், முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் சு.சிவ குமார், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சொ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உரையாற்றினர்
அறந்தாங்கி
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே அலுவ லக ஊழியர்கள், துணை வட்டாட்சியர் ஜபருல்லா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சரண்டர் விடுப்பு ரத்து, அகவிலைப்படி முடக்கம், ஒராண்டு கால பணி ஓய்வு மறுப்பு, அர சாணை 51 ஐ ரத்து செய்யக் கோரியும், இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிப்பு உள்ளிட்டவை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட் டம் செய்தனர்.