tamilnadu

img

இரட்டை சகோதரிகளுக்கு அரசு கல்லூரியில் இட ஒதுக்கீடு

மன்னார்குடி, ஆக.29- மன்னார்குடி வட்டம் உள்ளிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இரட்டை சகோதரிகளுக்கு மன்னா ர்குடி அரசினர் கலைக் கல்லூரியின் சிறப்பு இட ஒதுக்கீட்டு  மாணவர் சேர்க்கையில் இளங்கலை தமிழ் பாட முத லாமாண்டு ஒதுக்கீட்டு ஆணைகளை கல்லூரி முதல்வர் பேரா. சோ.ரவி வழங்கினார். ஆர்.வித்யா, ஆர்.நித்யா என்னும் இந்த இரண்டு சகோதரி களும் பெற்றோர்கள் இல்லாத மாணவிகள் என்பதும், இந்த  இருவருமே மாற்றுத்திறனாளிகள் என்பதும் குறிப்பிட த்தக்கது.  இவர்களையும் சேர்த்து முதல் நாள் சிறப்பு ஒது க்கீட்டு கலந்தாய்வில் 39 மாணவர்களும்  இளங்கலை மற்றும்  அறிவியல் முதலாம் ஆண்டு பாடப்பிரிவுகளில் சேர்க்கை ஆணைகளை பெற்றனர்.