திருவாரூர் அக்.5- அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில் தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் செவிலி யர்கள் பணியாற்றி வருகின்றனர். பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்த வர்கள் அவர்களின் பணி நிரந்தர பணியாளர்களுக்கு இணையானது. ஆனால், மிக்குறைந்த தொகுப்பு ஊதி யத்தில் பணி செய்து வரும் தங்களை நிரந்தர ஊழியர்க ளாக நியமித்திட வேண்டு மென வலியுறுத்தி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாவட்ட தலைவர் ஆர். சிவபிரசாத் தலைமை யேற்றார். சங்க மாவட்ட துணைத் தலைவர் ஜெ.மைக்கேல் மரியாள் முன்னிலை வகித்தார். சங்க மாவட்ட செயலாளர் ராமதாஸ் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் உ.சண்முகம் துவக்க உரையாற்றினார். சங்க மாவட்ட தலைவர் எம். ராஜமாணிக்கம், மாவட்ட செயலாளர் வெ.சோம சுந்தரம் சிறப்புரையாற்றி னார். மாவட்ட பொருளாளர் தனலெட்சுமி நன்றி கூறினார். திரளான செவிலியர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கமிட்டனர். ஆர்ப்பாட் டத்தின் நிறைவாக மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த்திடம் கோரிக்கை மனு அளித்த னர்.