tamilnadu

img

செய்தியாளர்  குடும்பங்களுக்கு நிவாரணம்

திருவாரூர், ஜூன் 24- திருவாரூர் மாவட்டத்தில் நிருபர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்க மாவட்ட கிளை சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. மாவட்ட, வட்டார செய்தியா ளர் மற்றும் நாளிதழ் விநியோகம் செய்பவர் என 115 பேருக்கு  நிவாரண உதவி வழங்கப்பட்டது. சங்கத்தின் டெல்டா மண்டல ஆலோசகர் எஸ்.நவமணி, மாவட்ட தலைவர் கே.நாகராஜன், செயலாளர் ஆர்.மதிராஜ், பொருளாளர் ஜி.ரவிச்சந்திரன், துணைச் செயலாளர் என்.சுரேஷ், நிர்வாகி ரவீந்திரன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்து செயல்பட்டனர்.