திருவாரூர், ஆக.20- ஆகஸ்ட் மாதத்திற்கான விவ சாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வியாழக்கிழமை ஆட்சியர் கூட்ட ரங்கில் நடைபெற்றது. ஆட்சியர் த.ஆனந்த் தலைமையேற்றார். பலதுறை அதிகாரிகள் பங்கேற்ற னர். தமிழ்நாடு விவசாயிகள் சங் கம் மற்றும் பல்வேறு விவசாய அமைப்பின் நிர்வாகிகள், முன் னோடி விவசாயிகள் கலந்து கொண் டனர். இடதுசாரி விவசாய இயக் கங்களின் தலைவர்களான எஸ்.தம்புசாமி, பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் பல்வேறு கருத்துக் களை முன்வைத்தனர். எஸ்.தம்புசாமி பேசுகையில், கொரோனா பேரிடர் கால நிவா ரண நிதி “பிஎம் கேர்ஸ்” என்ற டிரஸ்டிற்கு ஏராளமாக கிடைத் துள்ளது. இந்த நிதியிலிருந்து இந் திய விவசாயிகளுக்கு போதுமான அளவிற்கு நிதி வழங்குவதற்கு தமிழக அரசின் மூலமாக நட வடிக்கை எடுக்க ஆட்சியர் பரிந் துரைக்க வேண்டும். குறுவை சாகுபடி சிறப்பாக நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் சுமார் 15 நாட்கள் தண் ணீர் இல்லாமல் பயிர் காய்ந்ததை பார்க்க முடிகிறது. பல்வேறு கார ணங்களால் பாசன வாய்க்கால் களில் தண்ணீர் வரத்து இல்லா மல் போய் விட்டது. இதுகுறித்து கள ஆய்வு மேற்கொண்டு எந்தந்த பகுதிக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது என்று முறை யாக கணக்கிட்டு பாரபட்ச மில்லாமல் தண்ணீர் பிரித்து வழங் கப்பட வேண்டும். மின் இணைப்பு கேட்டு நீண்ட காலமாக காத்திருக்கும் விவசாயி களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். செம்மங்குடி சோழ சூடாமணி ஆற்றின் குறுக்கே கிடப் பில் போடப்பட்டுள்ள பாலம் கட்டு மானப் பணியை விரைவு படுத்த வேண்டும்.
செம்மங்குடி– தோட்டக் குடி இடையே சாலை பழுதடைந் துள்ளது. அந்த சாலையை புதி தாக போட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் போது மான மருந்து, மாத்திரைகளை கையிருப்பு வைத்திருக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பி.எஸ்.மாசிலாமணி பேசுகை யில், இந்த ஆண்டு குறுவை சாகு படி விளைச்சல் அதிகமாக இருந் தது குறித்து தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. விவசாயி களும் இம்மகிழ்ச்சியில் பங்கேற் கிறோம். அதே நேரத்தில் இரண்டு முறை மேட்டூர் அணை 100 அடி நிரம்பிய போதும் தண்ணீர் இல் லாத காலங்களில் விவசாயிகள் எவ்வாறு சிரமப்பட்டார்களோ அதே போன்றதொரு சிரமத்தை தற்போதும் சந்தித்தனர். அதற்கு முக்கியமான காரணம் நீர் பங்கீட் டில் ஏற்பட்ட குளறுபடிகள் தான். வரும் காலங்களில் நதிநீர் பங் கீட்டை நிறைவேற்றும் பொறுப்பை வேளாண்மை துறைக்கு மாற்ற வேண்டும். கட்டுமான பணிகளை செய்வதற்கு மட்டுமே பொதுப் பணித் துறையை பயன்படுத்த வேண்டும். நதிநீர் பங்கீட்டில் வேளாண்மைத் துறையை ஈடு படுத்துவதன் மூலம் விவசாயி களுக்கு ஏற்படக்கூடிய தேவை யின் அடிப்படையில் முறையான விநியோகம் நடக்கும். இதற்கு அரசு நடவடிக்கை எடுத்து புதிய அர சாணையை வெளியிட வேண்டும். மேலும் 2019-2020 ஆம் ஆண் டிற்கான பயிர் இன்சூரன்ஸ் தொகை பல விவசாயிகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இந்த கணக் கெடுப்பில் பல கிராமங்கள் விடு பட்டுள்ளது. எனவே பிரச்சனை களுக்கு உரிய கவனம் செலுத்தி ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண் டார். திருவாரூர் மற்றும் மன் னார்குடி விவசாயிகளுக்கான கூட்டம் கொரோனா காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தனித்தனியே நடைபெற்றது.