tamilnadu

img

உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கல்

 திருவாரூர் நவ2- திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 715 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 78 லட்சத்து 75 ஆயிரம் மானியத்துடன் கூடிய அம்மா இருசக்கர வாகனங்களையும், 6 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.33 லட்சம் மதிப்பிலான வங்கி கடனுதவிக்கான ஆணைகளையும் உணவுத் துறை அமைச்சர் இரா.காமராஜ் வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தலைமை வகிக்க, நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஏ.கே.கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் ஸ்ரீலேகா, நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், கோட்டாட்சியர் ஜெயபிரீதா, குடவாசல் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் பாப்பா சுப்ரமணியன், கமலாம்பிகா கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.டி.மூர்த்தி, மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.