tamilnadu

img

திருவாரூர் பிரச்சாரத்தில் பிரகாஷ் காரத் பேசினார்

திருவாரூர் பிரச்சாரத்தில் பிரகாஷ் காரத் பேசினார். அவரது உரையை அ.அன்வர் உசேன் தமிழாக்கம் செய்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமையேற்றார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.கந்தசாமி எழுதிய ‘சாதிக் கொடுமையின் உச்சத்தில் மோடி அரசு’ என்ற நூலை முன்னதாக பிரகாஷ் காரத் வெளியிட முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன் பெற்றுக்கொண்டார். திமுக வேட்பாளர் பூண்டி.கே.கலைவாணன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் வி.மாரிமுத்து, ஐ.வி.நாகராஜன், நாகை மாவட்ட செயலாளர் நாகை மாலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பி.எஸ்.மாசிலாமணி, மதிமுக மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் ஆரூர்.சீனிவாசன், இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகி அமிர்தராஜா, விசிக மாவட்ட செயலாளர் மா.வடிவழகன் உள்ளிட்ட கூட்டணிக்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். சிபிஎம் நகர செயலாளர் எம்.பாலசுப்ரமணியன் நன்றி கூறினார். நன்னிலம் நையாண்டி கலைக்குழுவினர்களின் அரசியல் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 

;