tamilnadu

img

வாலிபர் சங்க ரத்த தான கழகத்திற்கு பாராட்டு

 திருவாரூர் அக்15- கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து திருவாரூர் மாவட்டத் தில் வாலிபர் சங்க இரத்ததான கழகம் செயல்பட்டு வரு வதோடு தியாகி ஜெ.நாவலன் நினைவு தினம், மாவீரன் பகத்சிங் நினைவு தினம் மற்றும் அவசர காலங்களில் பொதுமக்களுக்கு உதவுவது என்ற முறையில் இதுவரை சுமார் 400 யூனிட் இரத்த தானம் அளிக்கப்பட்டுள்ளது. இச்செயலை பாராட்டி அங்கீகரிக்கும் வகையில் திரு வாரூர் ஆட்சியர் த.ஆனந்த் வாலிபர் சங்க மாவட்ட செயலா ளர் கே.பி.ஜோதிபாசுவிடம் அவற்றிற்கான சான்றிதழை வழங்கினார்.  சிபிஎம் பாராட்டு வாலிபர் சங்க ரத்ததான கழகத்திற்கு கிடைத்த பாராட்டை அறிந்து திருவாரூர் பி.ராமமூர்த்தி நினை வகத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல் ஆகி யோர் வலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.பி.ஜோதிபாசு விற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதுகுறித்து ஜோதிபாசு கூறுகையில், முதல் முறையாக இம்மாவட்டத்தில் ஆட்சியர் மூலமாக பாராட்டுச் சான்றிதழ் கிடைத்துள்ளது. இது எங்களின் அர்ப்பணிப்பான பணிக்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது என்று கூறினார். வாலிபர் சங்கத்தின் ரத்ததான கழக சேவைக்கு பலரும் தங்களின் வாழ்த்துக் களை தெரிவித்துள்ளனர்.