tamilnadu

img

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜூன் 24- பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். திருவாரூர் புலிவலம் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எம்.கே.என்.அனிபா தலைமையேற்றார். பழைய பேருந்து நிலையம் அருகில் சாலை போக்குவரத்து சங்க மாவட்ட செயலா ளர் ஏஒன்.மணி மற்றும் கர்ணன், கீழவீதியில் என்.தியாகராஜன், தெற்குமடவிளாகத்தில் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பேரிடர் காலத்தில் ஆட்டோ இயங்காத மாதங்க ளுக்கு அனைத்து வரிகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மீனவர்களுக்கு வழங்கப்படுவதை போல மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

;