திருவாரூர், மே 11- ஊரடங்கு நீடிக்கும் நிலையில் கடந்த 7-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளை தமிழக அரசு மீண்டும் திறந்தது. கொரோனா தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தியது. சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள், பல் வேறு அமைப்புகள், பொதுமக்கள் எதிர்ப்பை மீறியும் தமிழக அரசு மதுக்கடைகளை திறந்தது. இதனால் தமிழகத்தின் பல் வேறு இடங்களில் படுகொலை கள், அடிதடி போன்ற குற்றச் சம்ப வங்கள் நிகழ்ந்தன. திருவாரூர் மாவட்டத்திலும் நிகழ்ந்த ஒரு படு கொலையால் வெள்ளையம்மாள் என்கிற ஒரு இளம்பெண் தன் கண வனை இழந்து ஆதரவற்ற நிலை யில் கண்ணீர் மல்க பரிதவித்துக் கொண்டிருக்கிறார். அரசு டாஸ்மாக் கடைகளை திறந்த அன்று திருவாரூர் ஒன்றி யம், பின்னவாசல் ஊராட்சி, மாவூர் ஆற்றாங்கரை தெருவில் வசித்து வரும் நாடோடி குடும்பத்தைச் சேர்ந்த காளிப்பன் மகன் ராஜ் குமார் (23) என்பவரும், பள்ளிக் கூடத் தெருவில் வசிக்கும் முரு கேசன் (45) என்பவரும் ஒன்றாக சென்று அவ்வூரில் உள்ள மதுக் கடையில் மது அருந்தினர். அப்போது அவர்களுக்கி டையே தகராறு ஏற்பட்டு சமாதா னம் அடைந்தனர்.
அதன் பின்னர் அன்று இரவு ராஜ்குமார், முரு கேசன் வீட்டிற்குச் சென்று காலை யில் நடந்த தகராறின் தொடர்ச்சி யாக பேசியுள்ளார். அதன் பிறகு அங்கிருந்து ராஜ்குமாரை, முருகே சன் மற்றும் அவரது குடும்பத்தினர் ராஜ்குமார் வீட்டில் விட்டுச் சென்று விட்டனர். எல்லோருமே உற வினர் என்பதாலும் முன்பகை என்று எதுவும் இல்லாததாலும் ராஜ்குமா ரின் மனைவி வெள்ளையம் மாள்(21) மிகவும் எதார்த்தமாக கணவன் குடிபோதையில் இருப்ப தாக கருதி இருந்து விட்டார். மறு நாள் காலையில் கணவனை எழுப்பிய போது தான் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனடியாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் டி.ஆர்.தியாகராஜ னுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், காவல்துறைக்கு தகவல் தெரிவித்து “அரசின் நற்பெயரை காப்பாற்றுவதற்காக” மின்னல் வேகத்தில் செயல்பட்ட திருவாரூர் ஊரக காவல்துறை, மரணம் அடைந்த ராஜ்குமாரின் உடலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடல்கூறு ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்களிடம் உடலை ஒப்படைத்து மதியம் 1 மணிக்குள்ளாக எரியூட்ட செய்து விட்டனர்.
சம்பவம் குறித்த விசாரணை யின் அடிப்படையில் மரணம் அடைந்த ராஜ்குமாரை, முருகேசன் (45), மாரியம்மாள் (35), பாஸ்கரன் (55) ஆகியோர் கும்பலாக கட்டை யால் தாக்கியதால் உயிரிழந்ததாக தெரிய வந்ததை தொடர்ந்து மேற்கண்ட நபர்கள் மீது கொலைக் குற்றம் பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைத்துள்ள னர். முருகேசன் தம்பதியரின் மன வளர்ச்சி குன்றிய மகளை ஆதர வற்றோர் முகாமில் சேர்ப்பதற்காக ஊராட்சி மன்ற தலைவர் ஏற்பாடு செய்து வருகிறார். தற்போது ராஜ்குமாரின் மனைவி வெள்ளையம்மாள் ஆதர வற்ற நிலையில் தனது 10 மாத கைக் குழந்தையுடன் செய்வதறியாது தவித்து வருகிறார். அதுமட்டு மல்லாமல் அவர் 4 மாத சிசுவை கரு வில் சுமந்து வருகிறார் என்பது மேலும் வேதனை அளிக்கிறது. சம்ப வம் அறிந்து சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், ஒன்றிய செயலாளர் என்.இடும்பை யன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வி.ராஜாங்கம், எஸ்.சேகர், குன்னி யூர் கட்சிக் கிளை செயலாளர் குமர வேல் ஆகியோர் வெள்ளையம்மா ளைச் சந்தித்து ஆறுதலைக் கூறினர்.
இந்த துயரச் சம்பவம் குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி கூறுகையில், இந்த ஊரடங்கு காலத்தில் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதால் மதுக்கடைகளை திறக்க வேண்டாம் என்று ஒட்டு மொத்த தமிழகமும் கூறிய நிலை யில் அரசு செவி சாய்க்கவில்லை. அவசர கதியில் மதுக்கடைகளை திறந்ததால் மதுப்பிரியர்களின் ஆர்வமும், கட்டுக்கடங்காத கூட்ட மும் விதிமுறைகளை தகர்த் தெரிந்து விட்டது. பின்னவாசல் படுகொலை போல பல இடங்களில் குற்றச்சம்ப வங்கள் நடந்துள்ளன. உண்மை யிலேயே காவல்துறையின் சுய மரியாதையையும் தன்மானத்தை யும் தமிழக அரசு அலட்சியப்படுத்தி விட்டது. அரசின் இந்த நிர்வாக சீர்கேட்டால் இளம்பெண் வெள்ளை யம்மாள் தனது ஆருயிர் கணவனை யும், வாழ்க்கையையும் தொலை த்து விட்டு திசை தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார். 10 மாத கைக் குழந்தையுடன் தற்போது கர்ப்பமா கவும் இருக்கிறார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.
அடிப்படை வசதிகளில்லை
பின்னவாசல் ஆற்றங்கரைத் தெரு மற்றும் பள்ளிகூடத் தெருவில் வசிக்கும் 50 குடும்பத்தினர் மலைக ளில் தேன் சேகரித்து விற்பது போன்ற நிச்சயமற்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாடோடி கள் போன்று வாழ்ந்து வரும் இவர்க ளுக்கு வீடோ வீட்டு மனையோ, குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற எதுவும் இல்லை. மத்திய அரசின் குடியுரிமைச் சட்டம் போன்ற ஆபத்துக்கள் சூழ்ந்து வரும் வேளையில் இந்த குடும்பங்களின் நிலை குறித்து அச்சம் ஏற்படுகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் இந்த பகுதியை பார்வையிட்டு இங்கு வசிக்கும் குடும்பங்களுக்கு கொரோ னா நோய்த் தொற்று கால நிவார ணங்களை அளிப்பதற்கும், அனைத்து வகையான வசதிகளை யும் செய்து கொடுப்பதற்கு நடவ டிக்கை எடுக்க வேண்டும். முதற் கட்டமாக கணவனை இழந்த வெள் ளையம்மாளுக்கு அரசின் உதவி களை பெற்றுத் தருவதற்கும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியை பெற்றுத் தருவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் இலட்சக்க ணக்கான குடும்பங்கள் வெள்ளை யம்மாள் போன்றே பரிதவித்துள்ள னர். அம்மாவின் அரசு என்பவர் கள் இவர்களின் நிலையை மாற்றுவ தற்கு நடவடிக்கை எடுப்பார்களா?